11-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை அரசு புதிய உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 21, 2015

11-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை அரசு புதிய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் அதிகளவு மாணவர் களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2015-16-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூன் 15 முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 11-ம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் பாடப் பிரிவினை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment