அரூர்: அரூரில், 44 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த, 401 வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார் ஆய்வு செய்தார்.
பள்ளி வாகனங்களை முறைப்படுத்த, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த, 44 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த, 401 வாகனங்களை, அரூர் அடுத்த விஜயநகரம் அருகே நேற்று, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார் ஆய்வு செய்தார். படிக்கட்டுகளின் உயரம், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, அவசர வழி, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் குறைகள் ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு குறையை சரிசெய்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அரூர் ஆர்.டி.ஓ., ஷகிலா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனபாலன், அன்புசெழியன், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment