பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 26, 2015

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 13 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்ற விவரத்தை இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment