மாணவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 41 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மாநிலத்தின் தலைநகர் சென்னையில் சேலையூர் சியோன் பள்ளி மாணவி ஜேஸ்லின் ஜெனிஷா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இத்தேர்வில் மொத்த தேர்ச்சி சதவீதம் 92.9 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி 95.4 சதவீதமாகவும், மாணவர்கள் தேர்ச்சி 90.5 சதவீதமாகவும் இருந்தது.
No comments:
Post a Comment