கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை ரத்தாகிறது?
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக, கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், 19 மாநிலங்களின் கல்வித் துறை அமைச்சர்கள், மாநிலப் பிரதிநிகள், மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்வதற்கு ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், இந்த விஷயத்தில் அவசரம் காட்ட விரும்பாத மத்திய அரசு, இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு முடிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இதுகுறித்துக் கூறுகையில், "கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்; இதுதொடர்பாக, மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்
No comments:
Post a Comment