தனித்தேர்வர்கள் மேல்நிலை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மாலை 5.00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேர்வு இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்:
நடைபெறவிருக்கும் செப்டம்பர்/அக்டோபர் 2015க்கான மேல்நிலை துணைத்தேர்விற்க்கு தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் ஆகஸ்ட் 19 வரை விண்ணப்பிக்கக் கால் அவகாசம் வழங்கப்பட்டது. தனித் தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று சேவை மையங்களின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment