தூய்மை இந்தியா திட்டத்தில் என்சிசி மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மனோகர் பாரிக்கர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 25, 2015

தூய்மை இந்தியா திட்டத்தில் என்சிசி மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மனோகர் பாரிக்கர்

தூய்மை இந்தியா திட்டத்தில் என்.சி.சி.யை சேர்ந்த மாணவர்கள், தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்'' என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக டில்லியில் நேற்று(24-09-15) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது: தேசிய மாணவர் படையில், தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து, தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். தேசிய மாணவர் படையிலுள்ள ஒவ்வொரு மாணவரும், குறைந்தது ஒரு கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய நண்பர்கள் மூவரை இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

30 லட்சம் குப்பைகைள அகற்ற முடியும்:இதன்மூலம், சுமார் 30 லட்சம் கிலோ மக்காத குப்பைகளை எளிதாக அகற்ற முடியும் என்றார் மனோகர் பாரிக்கர்.சர்வதேச யோகா தினத்தன்று தேசிய மாணவர் படையிலுள்ள மாணவர்கள் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொண்டதன் மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்தச் சாதனையை நிகழ்த்தியதற்காக, மாணவர்களை மனோகர் பாரிக்கர் பாராட்டினார்.

No comments:

Post a Comment