இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது: 18 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 19, 2016

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது: 18 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதில் 15 லட்சம் முதல் 18 லட்சம் புதிய வாக்காளர்கள் இடம்பெறக் கூடும் என்று தெரிகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டி யல் சுருக்கமுறை திருத்த முகாமை தமிழக தேர்தல்
துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உட்பட 23 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், வெள்ள பாதிப்புகளால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிகள் தொய்வடைந்தன.
அரசு அலுவலர்கள் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சென்ற தால், வாக்காளர் பட்டியல் களப் பணிகள் தாமதமாக தொடங்கப்பட் டன. இதனால், வழக்கமான ஜன வரி 5-ம் தேதிக்கு பதிலாக, ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனஅறிவிக் கப்பட்டது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அறிவிக்கப்பட்டபடி இறுதி வாக் காளர் பட்டியல் நாளை வெளி யாகிறது.
கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இந்த ஆண்டில் 15 முதல் 18 லட்சம் புதிய வாக்காளர்கள் இணையலாம் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர்கள் எண்ணிக்கை கூடும் பட்சத்தில், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புதிய வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரி களான ஆட்சியர்கள் ஈடுபட்டுள் ளனர்.
இதற்கிடையில், தேர்தல் நடத் தும் அலுவலர்களுக்கான பயிற்சி களும், மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடனான கூட்டங்களும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு தேவைப்படும் 75 ஆயி ரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை தேர்தல் நடந்து முடிந்த பிஹார், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத் துக்கு கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு லாரிகளில் கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்டம் தோறும் பிரித்து அனுப்பப்படுகின் றன. சேலம், நீலகிரி மாவட்டங் களுக்கான இயந்திரங்கள் தற் போது வந்துள்ளன. இறுதியாக சென்னைக்கு 26-ம் தேதி இயந்தி ரங்கள் வரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கூட்டம் தள்ளிவைப்பு
முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் உயர் அதி காரிகள் மாநாடு ஆண்டுதோறும் ஜனவரியில் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான மாநாடு ஜனவரி இறுதியில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான, தலைமை தேர்தல் அதிகாரியின் ஆலோ சனைக் கூட்டம் தள்ளிவைக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment