தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று அவர் 8
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர்கள் மதுரை சுப்பிரமணியன், சிவகங்கை மலர்விழி, ராமநாதபுரம் நந்தகுமார், விருதுநகர் ராஜாராமன், தேனி வெங்கடாசலம், நெல்லை கருணாகரன், தூத்துக்குடி ரவிக்குமார், கன்னியாகுமரி சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கலெக்டருடன் தென் மண்டல ஐ.ஜி. முருகன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ் மற்றும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட வருவாய் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.பதட்டமான வாக்குச்சாவடி, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனைகள் வழங்கி பேசினார்.சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி அமைத்தல் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.Tuesday, January 19, 2016
New
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: 8 மாவட்ட கலெக்டர்கள்–அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment