அனைத்து பள்ளிகளிலும் இ-வகுப்பறைகள் அனைத்து பள்ளிகளிலும் இ-வகுப்பறைகள் ஆந்திர முதல்வர் பேச்சு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 17, 2016

அனைத்து பள்ளிகளிலும் இ-வகுப்பறைகள் அனைத்து பள்ளிகளிலும் இ-வகுப்பறைகள் ஆந்திர முதல்வர் பேச்சு

திருமலை: இந்தியாவின் 70வது சுதந்திர தின விழா நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் கல்விக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்படும். உலக அரங்கில் கல்வியில் இந்தியா முதலிடம் வகிக்க ஆந்திர மாநிலம் முக்கிய காரணியாக விளங்கும். அவ்வாறு ஆந்திராவை கல்வியில் முதன்மை மாநிலமாக கொண்டு வருவதே எனது லட்சியம். அதன்படி அனந்தபூரில் சென்ட்ரல் பல்கலைக்கழகமும், விஜயநகரத்தில் டிரைபல் பல்கலைக்கழகமும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மெரைன் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவம், விளையாட்டு, லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளுக்கு தனித்தனி பல்கலைக்கழகங்களும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதி செய்யப்பட்டு, இ-வகுப்பறைகள் கொண்டு வரப்படும். மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இலவச வைபை வசதி செய்யப்பட்டு அதற்கேற்றார்போல் பாடதிட்டங்கள் வடிவமைக்கப்படும். மாணவர்கள் வகுப்பறையில் இருந்து கல்வி கற்பதை விட நேரடியாக களத்தில் இறங்கி பயிற்சியுடன் கூடிய கல்வி கற்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

அரசு அலுவலகங்களில் உள்ள 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவும் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் 22 மில்லியன் யூனிட் மின் தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment