காந்திகிராம பல்கலையில் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தமுறையை பல்கலையில் துணைவேந்தர் நடராஜன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை ஒருசில மத்திய பல்கலைகளில் மட்டுமே உள்ளது. தற்போது காந்திகிராம பல்கலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அனைத்து பாடங்களுக்கும்’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. நேரில் வருவோர் விண்ணப்பிக்க பல்கலை கம்ப்யூட்டர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ.,- எம்.எட்., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ’ஆன்-லைன்’ மூலம் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் அலைச்சல், பண விரையம் தவிர்க்கப்படும். கூடுதல் தகவல் பெற விரும்புவோர் 0451 -2452372 ல் தொடர்பு கொள்ளலாம்,
Friday, May 1, 2015
New
காந்திகிராம பல்கலைக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment