திருச்சி எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சி.கவுசிகா கடந்த மாதம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான போது ஆங்கில பாடத்தில் 192 மதிப்பெண் உள்பட மொத்தம் 1186 மதிப்பெண் பெற்று இருந்தார். இவர் தனது விடைத்தாள்களை மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார்.
மறு மதிப்பீட்டில் கவுசிகா ஆங்கில பாடத்தில் கூடுதலாக 5 மதிப்பெண் பெற்றார். இதனால் ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண் பெற்றதுடன், அவருடைய மொத்த மதிப்பெண் 1191 ஆக உயர்ந்தது. இதன் மூலம் மாநில அளவில் 2-வது இடத்தை கவுசிகா பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment