பிளஸ்-2 மறு-மதிப்பீடு மூலம் மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த மாணவி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 18, 2015

பிளஸ்-2 மறு-மதிப்பீடு மூலம் மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த மாணவி

திருச்சி எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சி.கவுசிகா கடந்த மாதம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான போது ஆங்கில பாடத்தில் 192 மதிப்பெண் உள்பட மொத்தம் 1186 மதிப்பெண் பெற்று இருந்தார். இவர் தனது விடைத்தாள்களை மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார்.

மறு மதிப்பீட்டில் கவுசிகா ஆங்கில பாடத்தில் கூடுதலாக 5 மதிப்பெண் பெற்றார். இதனால் ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண் பெற்றதுடன், அவருடைய மொத்த மதிப்பெண் 1191 ஆக உயர்ந்தது. இதன் மூலம் மாநில அளவில் 2-வது இடத்தை கவுசிகா பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment