பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர் கூட்டணி கோரிக்கை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 16, 2015

பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை, உடனே நடத்த வேண்டும்' என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.நீலகிரி மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூடலுாரில் நடந்தது.செயலர் முருகேசன் வரவேற்றார்.

தேர்தல் ஆணையாளர் சத்தியநேசன் முன்னிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிவா, செயலாளராக முருகேசன், பொருளாளராக உமாசங்கர், மகளிர் அணி செயலர் ஆக நிர்மலாதேவி, துணை தலைவர் ஆக பிரசாத், துணை செயலர் ஆக முகமது அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூடலுார் வட்டார தலைவராக செல்வநாயகம், செயலர் மதியழகன், பொருளாளர் நிலேஷ், மகளிர் அணி செயலர் சப்ன ப்ரீத்தா, துணைத் தலைவர் யசோதா, துணை செயலர் மல்லேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்.

ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை தீர்க்க வேண்டும். ஊக்க ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பங்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment