அண்ணாமலை பல்கலைக்கழக விண்ணப்ப விற்பனை 22ம் தேதி வரை நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 15, 2015

அண்ணாமலை பல்கலைக்கழக விண்ணப்ப விற்பனை 22ம் தேதி வரை நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்.,- - பி.டி.எஸ்., மற்றும் பி.எஸ்சி., வேளாண்மை படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை, வரும், 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல்கலை பதிவாளர் வசந்தகுமார் அறிவிப்பு:

நடப்பு கல்வி ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., -- பி.எஸ்சி., வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விற்பனை, கடந்த மே மாதம், 14ம் தேதி துவங்கியது.
எம்.பி.பி.எஸ்., படிப்பில், 150, பி.டி.எஸ்.,சில், 100, பி.எஸ்சி., வேளாண்மை படிப்பில், 1,070 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள், அண்ணாமலை பல்கலை நிர்வாக அலுவலகம், படிப்பு மையங்கள் மற்றும், ’ஆன்லைன்’ மூலமும் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பல்கலைக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள், கடந்த, 12ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணப்ப விற்பனை, வரும், 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு, பல்கலை இணையதளம் மற்றும், பல்கலை தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment