அரசு ஊழியர் சங்கம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 2ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், செப்டம்பர் 2ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தமும் நடத்தப்போவதாக, அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெருஞ்சாலைத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், செப்டம்பர் 2ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Saturday, June 20, 2015
New
தமிழகம் முழுவதும் ஜூலை 2 முதல் தொடர் போராட்டம் :
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!!
Older Article
ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment