நாட்டின் முதல் செல்வந்தர் ஏழுமலையான்: திருப்பதி கோவில் சொத்து ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 19, 2015

நாட்டின் முதல் செல்வந்தர் ஏழுமலையான்: திருப்பதி கோவில் சொத்து ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் போல நன்கொடைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையான் சொத்து உயர்ந்து கொண்டே செல்கிறது.மலைப்பாதை அமைக்கப்பட்ட பிறகே பக்தர்கள், வருகையும், வருமானமும் அதிகரிக்க தொடங்கியது. திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது.இதுபற்றி சர்ச்சைகள் ஏற்படவே சொத்து மதிப்பை கணக்கீட்டு வெளியிட ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி கோவில் சொத்துக்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.2009–ம் ஆண்டு எடுத்த கணக்குபடி கோவிலுக்கு 4 லட்சத்து 4143.67 ஏக்கர் நிலம் இருந்தது. மேலும் கோவில் கட்டிடத்தின் மதிப்பு அரசாங்க நிர்ணய விலைப்படி ரூ.33,447.74 கோடியாக இருந்தது. ஆனால் இதன் வெளி மார்க்கெட் மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஏழுமலையான் பெயரில் வங்கியில் உள்ள முதலீடு ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ.744 கோடி கிடைக்கிறது.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக தனியாக அன்னதான டிரஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நித்ய அன்னதான டிரஸ்டுக்கு 2015 ஏப்ரல் மாதம் வரை ரூ.591 கோடி நன்கொடையாக வந்து உள்ளது. இது தவிர பிரானதான டிரஸ்டுக்கு ரூ.200 கோடியும் இதர டிரஸ்டுக்கு ரூ.300 கோடியும் வந்து உள்ளது.மேலும் தினந்தோறும் டிரஸ்டுகளுக்கு நன்கொடை வந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகிறது.தொடக்கத்தில் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்ட போது சில 100 ரூபாய்களே வருமானம் கிடைத்தது. 1958–ம் ஆண்டு நவம்பர் 28–ந்தேதி ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பெரிய சாதனையாக கருதப்பட்டது.அதுவும் ஒரே பக்தர் ரூ.1 லட்சம் கரன்சி நோட்டுகளை கட்டு கட்டாக உண்டியலில் போட்டதால் இந்த சாதனை ஏற்பட்டது. இந்த 1 லட்சத்தை விடுத்து கணக்கிட்டதில் ஒரு நாள் வசூல் ரூ.824.75 பைசா தான் கிடைத்தது.ஆனால் தற்போது ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி தாண்டி வசூலாகிறது.கடந்த 2010–ம் ஆண்டு 2.44 கோடி பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ஆனால் நடப்பு 2015–ம் ஆண்டில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1.50 கோடி பேர் ஏழுமலையானை தரிசனம் செய்து உள்ளனர்.நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உண்டியல் மற்றும் நன்கொடை வருமானமும் அதிகரித்து வருவதன் மூலம் நாட்டின் முதல் செல்வந்தர் நிலையில் ஏழுமலையான் உள்ளார்.

No comments:

Post a Comment