தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 1, 2015

தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கும் தேதி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக நவம்பர் 8-ஆம் தேதி தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பங்களை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த விண்ணப்பங்களை www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment