மதுரை மாவட்டத்தில், அக்.,8ல் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க, முதல் நாளே அனைத்து பள்ளிகளை பூட்டி விட்டு, சாவிகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,' என, மதுரையில் நேற்று நடந்த 'ஜாக்டோ' வேலைநிறுத்த ஆயத்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, 'ஜாக்டோ' தொடர்பாளர்கள் சந்திரன், ஆரோக்கியம் தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சுரேஷ், அலெக்சாண்டர் ஆகியோர் வேலைநிறுத்த போராட்டம் குறித்து பேசினர். கூட்டத்தில், 'மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடக்கும் வேலைநிறுத்தத்தில், தொடக்க முதல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வரை அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அக்.,7 மாலையே பள்ளிகளை பூட்டி சாவிகளை, முதன்மை கல்வி அலுவலகத்தில், தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஜாக்டோவின் 17 ஆசிரியர் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment