இந்திய இளைஞர்களின் கனவுகளில் ஒன்று மென்பொருள் துறையில் வேலைப் பார்ப்பது. அதற்கு முக்கிய காரணம் அதிக சம்பளம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடும்.
ஒரு வேலைவாய்ப்பு இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் ஐ.டி. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நாடுகள் பற்றிய பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஐ.டி. மேலாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.2703570 சம்பளம் பெறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் திறமையான ஊழியர்கள் அதிக அளவில் இருப்பது தான் என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பல்கேரியா உள்ளது. வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. நான்காவது இடத்தில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் அதனை தொடர்ந்து இந்தியா, சீனா, செக் குடியரசு மற்றும் அர்ஜென்டீனா ஆகிய நாடுகள் உள்ளன.
ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சுவிட்சர்லாந்து இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாக சம்பளம் வழங்குகிறது. இந்த பட்டியலில் பெல்ஜியம் இரண்டாவது இடத்தில் உள்ளது. டென்மார்க் மூன்றாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து முறையே நான்காவது, ஐந்தாவது, இடத்திலும் உள்ளது.
No comments:
Post a Comment