ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 1, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இன்று 01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது

இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது

தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் சலுகை வழங்கிய Go 25  அரசானையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது  திரு S. வின்சென்ட் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு 25.09.2014  வழங்கப்பட்டது.

தமிழக அரசு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு  ஒரு மாதம் இருக்கும் இந்த நேரத்தில் ஆகஸ்ட் 7 ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது  இந்த வழக்கு நேற்று 31.08.2015 விசாரனைக்கு வந்தது .

தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு லாவண்யா மற்றும் பலர் தொடர்ந்துள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட்டது.
இதில் தமிழக அரசு மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்கும்படி திரு வின்சென்ட் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது.

WP(MD)  2677 Of 2014  S.VINCENT` Vs. STATE OF TAMIL NADU, REP BY IT
WP(MD)  4558 Of 2014 

K.K.RAMAKRISHNAN Vs. THE UNION OF INDIA, . REP. BY

மேற்கானும் இந்த வழக்கு தான்  ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு

தகவல்
கார்த்திக் பரமக்குடி

No comments:

Post a Comment