பதவி உயர்வில் விதிமீறல் பள்ளிகளுக்கு எச்சரிக்கை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 21, 2015

பதவி உயர்வில் விதிமீறல் பள்ளிகளுக்கு எச்சரிக்கை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி  நீட்டிப்பு வழங்குவதில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

'அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளும் உண்டு. இந்நிலையில், அரசு ஆணைகளை மீறி பதவி உயர்வு வழங்குதல், கட்டாய ஓய்வுவை திணித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார்கள் பதிவு செய்யப்படும்போது, மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment