குழந்தைப் பருவ ஆபாசப் படங்களைத் தடுக்க புதிய அமைப்பு: மத்திய அரசு திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 21, 2015

குழந்தைப் பருவ ஆபாசப் படங்களைத் தடுக்க புதிய அமைப்பு: மத்திய அரசு திட்டம்

குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைத் தடுக்கவும், இணைவழிக் குற்றங்களைக் முறியடிக்கவும் அதிநவீனமான அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களைத் தயாரிப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது.
இதன்படி, குழந்தைப் பருவ ஆபாசப் படங்களைத் தடுப்பதற்காக புதிய அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மிகத் தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இணையவழிக் குற்றங்களைத் தடுக்க வேண்டியுள்ளது.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான இணையதளங்களை முறையாகக் கண்காணித்து தடை செய்ய வேண்டும். இது தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்குவது அவசியம்.
உள்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய சமூக வலைதளங்களைக் கண்காணிக்க அதிநவீன செயலி தேவைப்படுகிறது.
இணையத்தில் தங்களது குழந்தைகளின் பயன்பாட்டைக் கண்காணிப்பதும், நல்ல விதமான இணையப் பயன்பாடு குறித்து குழந்தைகளுக்கு கற்பிப்பதும் பெற்றோர்களின் கடமையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிபுணர் குழுவின் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்துமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த உத்தரவின் பேரில், இந்திய இணையக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (ஐசி4) என்ற புதிய அமைப்பு, ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இணைய வழிக் குற்றங்கள் ஆண்டு ஒன்றுக்கு 40 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைப் பருவ ஆபாசப் படங்களைக் கொண்டுள்ள 800 இணையதளங்களைத் தடை செய்யுமாறு இணையச் சேவை நிறுவனதாரர்களுக்கு மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment