பெங்களூர்-சான்பிரான்சிஸ்கோ இடையே உலகின் நீண்டதூர இடைநில்லா விமானச்சேவையை இயக்க ஏர் இந்தியா திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 21, 2015

பெங்களூர்-சான்பிரான்சிஸ்கோ இடையே உலகின் நீண்டதூர இடைநில்லா விமானச்சேவையை இயக்க ஏர் இந்தியா திட்டம்

இந்தியாவின் 'கார்டன் சிட்டி' என்றழைக்கப்படும் பெங்களூர் நகரை அமெரிக்காவின் பிரபல தகவல்தொடர்பு தொழில்நுட்ப தொழில் நகரமான சான்பிரான்சிஸ்கோவுடன் இணைக்கும் சுமார் 14 ஆயிரம் தூர இடைநில்லா விமானச் சேவையை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'போயிங் 77-200' ரக விமானம் மூலம் 17 முதல் 18 மணிநேரத்தில் இருமுனைகளையும் இணைக்கும் இந்த வழித்தடம் உலகின் மிக நீண்ட விமான வழித்தடம் ஆகும். இதன்மூலம், உலகின் நீண்டதூர இடைநில்லா விமானச்சேவையை இயக்கும் நிறுவனமாக ஏர் இந்தியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஆஸ்திரேலியாவின் குவான்ட்டாஸ் விமான நிறுவனம், அமெரிக்காவின் டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் நகரில் இருந்து சிட்னி நகரை இணைக்கும் 13,730 கிலோ மீட்டர் தூர இடைநில்லா விமானச் சேவையை இயக்கி வருகின்றது. இதுவரை உலகின் நீண்டதூர இடைநில்லா விமானச்சேவையாக இது கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா நகருக்கு சுமார் 13,760 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லா விமானச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கிடையே, பெங்களூர்-சான்பிரான்சிஸ்கோ இடையே திட்டமிட்டபடி, 14,000 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் இந்த விமானச் சேவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டால், அந்த பெருமை ஏர் இந்தியாவுக்கு வந்துசேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment