இந்தியா உட்பட உலக நாடுகளில் தற்போது இணையவழிக் கல்வி பிரபல மாகி வருகிறது என்று காமன்வெல்த் கற்றல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அமைப்பின் இயக்குநர் வி.பாலாஜி கூறினார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நூற்றாண்டு சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், கனடாவின் காமன்வெல்த் கற்றல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அமைப்பின் இயக்குநர் வி.பாலாஜி பேசியதாவது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாடுகளை கிராம மக்களிடம் குறிப்பாக விவசாயிகளிடம் கொண்டு போய் சேர்த்ததில் எம்.எஸ்.சுவாமி நாதன் அறக்கட்டளைக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்பட உலக நாடுகளில் இணையவழிக் கல்வி மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆன்லைனில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்துப் பாடங்களை கணினியில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடிகிறது. உயர் கல்விக்கான செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில் இணையவழிக் கல்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் கல்வி வளர்ச்சி அதி கரித்துள்ளது. ஆனால், மாணவர் களின் திறனை மேம்படுத்த வேண்டி யுள்ளது. அந்த வகையில், பிரதமர் அறிவித்துள்ள தேசிய திறன் மேம் பாட்டுத் திட்டம் நல்ல முயற்சி. இவ்வாறு பாலாஜி பேசினார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்ட ளையின் அறங்காவலரும், கஸ்தூரி சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ‘இந்து’ என்.ராம் பேசும்போது, “பல் வேறு நிலைகளில் இந்தியா வளர்ந் துள்ள போதிலும், இணைய வசதியை மக்களிடம் சென்று சேர்ப்பதில் பின் தங்கிய நிலையில்தான் உள்ளது. மாணவர்களின் கல்வித் திறனை இன் னும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசுகையில், “கிராம மக்களின் மேம்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப வசதிகளை 1992-ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறோம். இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சமுதாயக் கல்லூரி திட்டத்தால், தொழில்நுட்ப வசதிகள் சென்றடைய முடியாத மக்களையும் சென்றடைந்துள்ளன” என்றார்.
No comments:
Post a Comment