லண்டன் : 2025ம் ஆண்டிற்குள், காற்று மாசுபாட்டினால் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ள நகரங்களில், டில்லி முதலிடம் பிடிக்கும் என்று பிரிட்டனை சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்ட்டியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளனில் அதிகரித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் வாகனங்கள் வைத்திருந்த காலம் போய், இன்று நடுத்தர குடும்பத்தினர் வாழும் வீட்டிலேயே ஒன்றுக்கு .மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த வாகனங்கள் வெளியிடும் புகையினால், நமது வளிமண்டலம் கடுமையாக மாசுபட்டுள்ளது. காற்று மாசுபட்டிருப்பதன் காரணமாக, மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இதன்காரணமாக, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.
பிரிட்டனை சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்ட்டியூட் ஃபார் கெமிஸ்ட்ரி மையம், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் மரணங்கள் குறித்து சர்வதேச நாடுகளிடையே கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது .வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது காற்றில் உள்ள மாசுபாட்டின் நிலையே மேலும் தொடருமானால், 2025ம் ஆண்டில், காற்று மாசுபாட்டினால் அதிக மரணங்கள் நிகழ்ந்த நகரங்களின் பட்டியலில், டில்லி தான் முதலிடம் பிடிக்குமாம். 2025ம் ஆண்டில், டில்லியில் காற்று மாசுபாட்டினால், குறைந்தது 32 ஆயிரம் பேர் மரணமடைவர்களாம்...
2025 முதல் 2050ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கோல்கட்டாவில் காற்று மாசுபாட்டின் காரணமாக, 54,800 பேரும், மும்பையில் 33,100 பேரும் மரணமடைவார்களாம்...
தற்போதைய அளவில், காற்று மாசுபாட்டினால், சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 3.3 மில்லியன் பேர் மரணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment