சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடுபாடநூல் நிறுவனத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை விநியோகிக்க வியாழக்கிழமை (ஜூன் 23) சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகள் வியாழக்கிழமை (ஜூன் 23) தொடங்குகின்றன.தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) முதல், 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து பாட புத்தகங்களும் ஒரே ஒரு கவுன்ட்டர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து கடந்த இரண்டு நாள்களாக பெற்றோர் கூட்டம் அலைமோதுகிறது.
ஒரே ஒரு கவுன்ட்டர் செயல்படுவதால் புத்தகங்களைப் பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து பிளஸ் 1 புத்தகங்களை மட்டும் விநியோகிக்க வியாழக்கிழமை (ஜூன் 23) முதல் கூடுதலாக ஒரு சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment