பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும்திட்டம்: முதல்வர் விளக்கம்.
பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்து உரையாற்றினார்.
அப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று எம்எல்ஏ செங்குட்டுவன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.அதில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. சில குழந்தைகளுக்கு மாம்பழச்சாறால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று பதில் அளித்தார்
No comments:
Post a Comment