எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 26, 2016

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மார்ச் 2017-ல் நடைபெறவுள்ள பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் 2017 ஜனவரி 4-ம் வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாக தேர்வெழுதுதல் வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட் டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களின்விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்ட ணத்தை பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோருக்கு தேர்வு கட்டணம் செலுத்து வதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment