ஒடிசாவில் அக்னி 5 ஏவுகணையின் இறுதிக் கட்ட சோதனை வெற்றி:விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி-ஜனாதிபதி வாழ்த்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 26, 2016

ஒடிசாவில் அக்னி 5 ஏவுகணையின் இறுதிக் கட்ட சோதனை வெற்றி:விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி-ஜனாதிபதி வாழ்த்து


அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிக்கு கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அக்னி 5 ஏவுகணை, 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் அடுத்த அக்னி- 6 ஏவுகணையை கட்டமைக்கும் பணியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கும். இந்த ஏவுகணையை நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது 8000 முதல் 10000 கி.மீட்டர் வரையில் சென்று தாக்கும் வல்லமையுடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment