சமையல் கியாஸ் கட்டணம் பெற வீட்டுக்கே வரும் ஸ்வைப் மிஷின் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 27, 2016

சமையல் கியாஸ் கட்டணம் பெற வீட்டுக்கே வரும் ஸ்வைப் மிஷின்


உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை தவிர்த்து மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசு திட்டங்களையும் அறிவித்து உள்ளது.



இந்த நிலையில் சமையல் கியாஸ் விற்பனையிலும் மின்னணு பரிமாற்றம் கொண்டு வரப்படுகிறது. சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு ரொக்கமாக பணத்தை கொடுக்க வேண்டியதில்லை.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கியாஸ் வாங்கி கொள்ளலாம். இதற்காக சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்கள் ஸ்வைப் எந்திரத்தையும் உடன் கொண்டு வருவார்கள்.

இதன் மூலம் ரொக்க பணத்துக்கு பதிலாக கார்டுகளை பயன்படுத்தி சிலிண்டர் பெறலாம். இதற்கான திட்டத்தை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment