உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமையல் கியாஸ் விற்பனையிலும் மின்னணு பரிமாற்றம் கொண்டு வரப்படுகிறது. சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு ரொக்கமாக பணத்தை கொடுக்க வேண்டியதில்லை.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கியாஸ் வாங்கி கொள்ளலாம். இதற்காக சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்கள் ஸ்வைப் எந்திரத்தையும் உடன் கொண்டு வருவார்கள்.
இதன் மூலம் ரொக்க பணத்துக்கு பதிலாக கார்டுகளை பயன்படுத்தி சிலிண்டர் பெறலாம். இதற்கான திட்டத்தை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment