நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. உச்சவரம்பு: பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; அப்போது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு, டிச., 30 வரையிலான, 50 நாட்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. வங்கிகளில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும்; ஏ.டி.எம்.,களிலிருந்து, ஒரு நாளில், அதிகபட்சம், 2,500 ரூபாயும் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்திருந்த, 50 நாட்கள் கெடு நேற்றுடன்(டிச.,30) முடிவடைந்தது. ரூ4,500 ஆக உயர்வு: இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி (நாளை) முதல் ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ரூ.2,500 ஆக இருந்த வரம்பு ரூ.4,500 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்று விதிக்கப்பட்ட வரம்பு தளர்த்தப்படவில்லை.Saturday, December 31, 2016
New
RBI ORDER COPY-நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
TAMILNADU open university B.Ed. results...
Older Article
பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment