சுந்தரனார் பல்கலை தொலைநெறி தொடர்கல்வி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு.
இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இப் பல்கலைக்கழகத்தின் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் 2016-17 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி 2017 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளிட்டவற்றில் சேரலாம் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment