மார்ச் மாதமே முட்டாள் தினம் ஆரம்பமாகி விட்டது. '1381 மார்ச் 32ம் தேதி இங்கிலாந்து அரசர் இரண்டாம் ரிச்சர்ட்க்கும் பொகிமினா அரசி ஆன்னிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது' என அனைவருக்கும் மணவோலை அனுப்பப்பட்டது. அதைப் படித்த அனைவரும் மார்ச்சில் 31 நாட்கள் தானே உள்ளன. ஏப்ரல் 1ம் தேதி தான் திருமணம் என நினைத்தனர். இவ்விஷயம் நாடு முழுவதும் பரவி இப்படியா அரசர் திருமணம் செய்வது என கேலி பேசலாயினர். அதனால் ஏப்ரல் 1ம் தேதி ஏமாந்தவர்கள்
தினமாகவும் ஏமாற்றுபவர்கள் தினமாகவும் மாறியது. பண்டைய காலங்களில் புத்தாண்டை மார்ச் 25ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 1ம் தேதி வரை கொண்டாடி மகிழ்ந்தனர். பல ஐரோப்பிய நகரங்களில் நடக்கும் இந்த கொண்டாட்டங்களைப் பார்த்து இங்கிலாந்து மக்கள், அவர்கள் முட்டாள்கள் எனவும், ஐனவரி 1ம் தேதி புத்தாண்டை கொண்டாடத் தெரியாதவர்கள் எனவும் கேலி பேசினர். அவர்களை ஏப்ரல் வாதிகள் எனவும் ஏப்ரல் முட்டாள்கள் எனவும் அழைத்தனர்.
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம்ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதியகிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள்1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment