'பாடப் புத்தகங்கள் விலை பன்மடங்கு உயர்கிறது!' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 7, 2015

'பாடப் புத்தகங்கள் விலை பன்மடங்கு உயர்கிறது!'


தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில்  பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. பல்வேறு வகுப்புகளுக்கான  பாடப்  புத்தகங்களின் விலை 2 முதல் 4 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தமிழக அரசால் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சடித்து விற்பனை செய்யும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

காகித விலை உயர்வு, அச்சடிப்பு மற்றும் விற்பனை, நிர்வாகச் செலவினங்கள் காரணமாக வரும் 2015-2016 ஆம் கல்வி ஆண்டில்  பள்ளிப் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாகப்  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் டி.சபீதா அறிவித்துள்ளார்.

அதன்படி, ஒன்று முதல் 9 ஆம்  வகுப்பு வரையிலான முப்பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்1, பிளஸ்2 பாடப்புத்தகங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பிளஸ் டூ மனையியல் புத்தகத்தின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, பிளஸ்1 தமிழ் பாடப்புத்தகம் ரூ.12.50-ல் இருந்து ரூ.30 ஆகவும், வரலாறு புத்தகம் ரூ.23-ல் இருந்து ரூ.50 ஆகவும், கணினி அறிவியல் தொகுதி-2 ரூ.30-லிருந்து ரூ.70 ஆகவும் உயர்ந்துள்ளது.

பிளஸ் 2 ஆங்கில புத்தகம் ரூ.28-லிருந்து ரூ.60 ஆகவும், கணக்கு புத்தகம் (தொகுதி 1, தொகுதி-2) ரூ.27-லிருந்து ரூ.80 ஆகவும், தாவரவியல் புத்தகம் ரூ.27-லிருந்து ரூ.70 ஆகவும், விலங்கியல் புத்தகம் ரூ.24-லிருந்து ரூ.90 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment