மருந்து கடைகளில், குழந்தைகள் உணவு, ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கூறினார். அதுபோல, பிற துரித
உணவுகளான, மக்ரோனி, பாஸ்தா போன்றவற்றையும் சோதனைக்கு உட்படுத்தப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
'நெஸ்லே' என்ற சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்து, குழந்தைகள் விரும்பிச்
சாப்பிடும், 'மேகி நுாடுல்ஸ்' உணவுப் பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., என்ற ரசாயனம், காரீயம் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில், மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, நெஸ்டம், செரிலாக், ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற குழந்தைகள் உணவு, குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்களை, மருந்துக் கடைகளில் இருந்து அகற்றி, சாதாரண கடைகளில் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
No comments:
Post a Comment