தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 143 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 10, 2015

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 143 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தபால்காரர் - 143

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: மெயில்கார்டு: 01

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

வயதுவரம்பு: 04.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2015

மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment