பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் விவரத்தை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.
வரும் 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், சேர்க்கைக்கான பாட வாரியான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் விவரத்தை கல்லூரி சனிக்கிழமை வெளியிட்டது.
கல்லூரியின் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் இந்த கட்-ஆஃப் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:
பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் அவர்களுக்குரிய பாடத்துக்கான தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஞாயிறு (செப்.20) அல்லது திங்கள்கிழமை கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் என்றார் அவர்.
No comments:
Post a Comment