தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூல் செய்வதாகக்கூறி பள்ளி முன்பு பெற்றோர்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி, வேடசெந்தூரில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
மேலும், பள்ளி நிர்வாகத்திடம் அதிக கட்டணம் குறித்து கேள்வி எழுப்பும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாகவும், கட்டணத்தை குறைக்குமாறு கேட்ட பெற்றோர்களையும், அவர்களது குழந்தைகளையும் பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த பெற்றோர்கள் திங்கள்கிழமை பள்ளி முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆழியாறு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடமன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கட்டணக் குறைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment