பி.எட். கட்–ஆப் மார்க் வெளியீடு: தரவரிசை பட்டியல் நாளை வெளியாகுகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 20, 2015

பி.எட். கட்–ஆப் மார்க் வெளியீடு: தரவரிசை பட்டியல் நாளை வெளியாகுகிறது

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் உள்ள 1,777 பி.எட். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.வருகிற 28–ந் தேதி முதல் அக்டோபர் 5–ந் தேதி வரை 6 நாட்கள் கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கு 7425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த நிலையில் பாட வாரியான குறைந்தபட்ச கட்–ஆப் மதிப்பெண் விவரத்தை கல்லூரி நேற்று வெளியிட்டுள்ளது. கல்லூரியின் www.ladywillingdoniase.com என்ற இணைய தளத்தில் கட்–ஆப் மார்க் விவரம் வெளியிடப்பட்டுள் ளது.இது குறித்து பி.எட். சேர்க்கை செயலாளர் பாரதி கூறியதாவது:–பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்–ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் அவர்களுக்குரிய பாடத்துக்கான தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.தர வரிசை பட்டியல் நாளை (திங்கட்கிழமை) கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்படும்.இந்த ஆண்டு பி.எட்., எம்.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பி.இ., பி.டெக் தொழிற்படிப்பு முடித்தவர்கள் பி.எட். ஆசிரியர் பயிற்சி படிக்கலாம் என என்.சி.டி.இ. அறிவித்துள்ளது.அதன்படி தமிழகத்திலும் பொறியியல் பட்டதாரிகள் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் பி.இ., பி.டெக் முடித்தவர்கள் 1113 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் மட்டுமே ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.பி.எட். கலந்தாய்வு ஒருபுறம் நடந்தாலும் கல்லூரிகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கலந்தாய்வு முடிவதற்கு முன்பே கல்லூரிகள் திறக்கப்படும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment