அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வு,நாளை நடக்கிறது. திருப்பூர், தாராபுரம், உடுமலை வருவாய் கோட்டங்களில், 35 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில், 16 ஆயிரத்து, 459 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, 54 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து பறக்கும் படைகள், எட்டு மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்தார்.
தேர்வு மையங்களை வீடியோ மூலம் கண்காணிக்க வேண்டும். மொபைல் போன் எடுத்துவர அனுமதிக்க கூடாது. மையங்களுக்கு செல்ல, சிறப்பு பஸ் ஏற்பாடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment