சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேசிய தேர்வில் நெய்வேலி பள்ளி மாணவி தங்கம் வென்றார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 23, 2016

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேசிய தேர்வில் நெய்வேலி பள்ளி மாணவி தங்கம் வென்றார்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேசிய தேர்வில் நெய்வேலியில் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தர்ஷிணி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜிம் கார்பெட் என்ற தேசிய சுற்றுச்சூழல் இயக்கம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் இடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேசிய அளவிலான திறன் போட்டிகளை கடந்த 14 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் நெய்வேலியில் உள்ள என்எல்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில், 11-ம் வகுப்பு மாணவி கி.தர்ஷிணி, தங்க பதக்கம் வென்றார்.

மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அவசியம் எனக் கருதி, பள்ளி தலைமையாசிரியை சி.பத்மாவதி அறிவுறுத்தியதால் பள்ளியின் ஆங்கில ஆசிரியை மரியா ராஜரத்தினம் ஒவ்வொரு வகுப்பாக சென்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி எடுத்து கூறி, அதிக அளவில் மாணவிகளை பங்கு பெற செய்ததோடு தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவும் அவர் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment