மாதனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில மொழியறிவு மேம்படுத்தும் திட்டம் தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 23, 2016

மாதனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில மொழியறிவு மேம்படுத்தும் திட்டம் தொடக்கம்

மாதனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில மொழியறிவு மேம்படுத்தும் திட்டம் தொடக்கம்

மாதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘குழுக் கற்றல் மூலம் மொழியறிவு மேம்படுத்தும் திட்டம்’ நேற்று தொடங்கப்பட்டது.

ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 149 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 5-ம் வகுப்பு மாணவர்களின் ஆங்கிலச் சொல்லாக்கத் திறன், அகராதி பயன்படுத்தும் திறனை வளர்க்க, மாவட்ட கல்வி மற்றும் ராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒத்துழைப்புடன் ‘குழுக் கற்றல் மூலம் மொழியறிவை மேம்படுத்தும் திட்டம்’ நேற்று தொடங்கப்பட்டது.

இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும், புதிய வார்த்தைகளுக்கு அகராதி மூலம் பொருள் அறிந்து அதனை சக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் ஆகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

சமுதாய பங்களிப்புடன் செயல்படும் இந்த பயிற்சி வகுப்பை, மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சிவானந்தம், ஊராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘தி இந்து’ இணைப்பு ‘தி யங் வோர்ல்ட்’ பிரதிகளை இலவசமாக வழங்கி, ஆங்கில மொழியின் அவசியம், அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார்.

இத்திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படும் அடைவுத் திறன்கள் குறித்து ராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மணி பேசும்போது, செய்தித் தாள்கள் ஒரு கற்றல் கருவியாக பயன்படுகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்தி, நாளேடுகளை வாசிக்க பழகிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் பேசும்போது, தனியார் பள்ளி மாணவர்களை போல், அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற கோட்பாட்டுடன் இந்த திட்டம் இப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டம் அமலில் உள்ளது. 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர் களுக்கு அடுத்த 20 வாரங்களுக்கு (வெள்ளிக்கிழமை தோறும்) பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பில், ஆங்கில பிரதிகளில் வரும் புதிய சொற்களுக்கு அகராரதியில் பொருளை கண்டுபிடித்து, அதற்கான விளக்கங்கள், ஆங்கில புலமை வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் அளிக்கப்படும்.

அதேபோல், கணினியில் உள்ள மென்பொருளைப் பயன்படுத்தி ஆங்கிலச் சொற்களுக்கு பொருள் காணும் செயல்முறைகளும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவதுடன், அரசுப் பள்ளியும் வளர்ச்சி பெறும் என நம்பிக்கை பிறக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, அப்துல் கலாம் பற்றிய கவிதை, விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றிய கவிதை, கணினி இயக்குதல், நீர்நிலைகளின் பெயர்கள், இந்தியாவில் உள்ள மாநிலம் மற்றும் அதன் தலைநகரம், திருக்குறள் ஒப்பித்தல் ஆகிய தனித்திறன்கள் குறித்த பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment