6 பல்கலைக்கழகங்களில் 'யோகா'விற்கு தனியாக துறைகள்; மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 18, 2016

6 பல்கலைக்கழகங்களில் 'யோகா'விற்கு தனியாக துறைகள்; மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி தகவல்

வரும் கல்வியாண்டு முதல் 6 முக்கிய மத்திய பல்கலைக்கழகங்களில் யோகாவிற்கு என பிரத்யேக துறைகள் உருவாக்கப்பட உள்ளதாகவும், அடுத்த ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்படும் எனவும் மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த தேசிய அளவிலான யோகா கருத்தரங்கில் கலந்து கொண்ட போது இதனை அவர் தெரிவித்தார்.

உத்தராகண்டில் உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம், சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி, கேரள மத்திய பல்கலைக்கழகம், அமர்கான்டக்கில் உள்ள இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம், இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகம், ராஜஸ்தானில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றி்ல் வரும் கல்வியாண்டு முதல் யோகாவிற்கு தனி துறைகள் அமைக்கப்பட்டு  சான்றிதழ் படிப்புகள் முதல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், யோகா அறிவியலில் பி.எச்.டி வரை படிப்புகள் வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment