புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.வங்கக்கடல் அருகே உருவாகியுள்ள "நடா' புயல் டிசம்பர் 2-ஆம் தேதி கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளிக்கிழமை (டிச.1, டிச.2) விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை(டிச.2) நடைபெறும் தேர்வுகள் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, December 1, 2016
New
பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்னா பல்கலை அறிவிப்பு.
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment