ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்... வருகிறது அடுத்த செக்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 1, 2017

ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்... வருகிறது அடுத்த செக்!

ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்... வருகிறது அடுத்த செக்!
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான்எண்ணுடன் இணைக்காதவர்களின் பான் அட்டைகள்ரத்து செய்யப்படும் என்று மத்திய
அரசு தெரிவித்துள்ளதுபான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் செயலாளர் ஹஷ்முக் ஆதியா இந்தத்தகவலைக் கூறியுள்ளார்தனி நபர்கள் வைத்திருக்கும்நிரந்தர வருமான வரி கணக்கு எண் என்று சொல்லப்படும்பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.அப்படி ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள்ரத்து செய்யப்படும்ஆதார் எண்ணை இணைப்பதற்கானகலாக்கெடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆதார்எண்ணை பான் அட்டையுடன் இணைப்பதற்கானகாலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பான் அட்டைவைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை பான்எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.
2017 - 18 நிதிக் கொள்கையில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள்தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தார்.இதே போன்று ஆதார் எண்ணை கட்டாயம் பான்அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும்கூறியிருந்தார்.
ஒரு நபரே பல பான் கார்டுகளை வைத்து வருமான வரிகணக்கு தாக்கல் செய்து வரி ஏய்ப்பு செய்கிறார்களாஎன்பதை கண்காணிப்பதற்காக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது.
உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த உத்தரவில் வருமானவரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றுகூறியிருந்ததுஎனினும் இதை செயல்படுத்துவதற்கு சிலநிபந்தனைகளையும் விதித்திருந்தது.
நாட்டிலுள்ள 2 கோடி வரி செலுத்துவோர் ஆதார்எண்ணை பான் அட்டையுடன் இணைத்துள்ளனர்.ஏறத்தாழ 25 கோடி பேரிடம் பான் அட்டைகள் உள்ளன,மொத்தம் 111 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகள்வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள்தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment