தொலைந்த குழந்தைகளை மீட்கும் திட்டம் இன்று தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 1, 2016

தொலைந்த குழந்தைகளை மீட்கும் திட்டம் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க, இன்று முதல் (1-ம் தேதி), வரும் 31-ம் தேதிவரை ‘புன்னகையைத் தேடி-2’ஐ செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது.

காணாமல் போன மற்றும் ஆதர வின்றி சுற்றித் திரியும் குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள், பணி யில் அமர்த்தப்பட்ட சிறார்கள் குறித்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்கள், காவல் துறை-100, சைல்டு லைன்-1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 9444516987, 044 - 27665595, காவல் துறை ஆய்வாளர் - 9498148199, 9498100347, மாவட்ட காவல் அலுவலகம்: 044 - 27661010, குழந்தைகள் நலக்குழு: 044-27660084, சைல்டு லைன் அலுவலகம்: 044 - 27664607, சேவாலயா - 9585681313 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் அளிக்கலாம்.

No comments:

Post a Comment