சென்டாக் கவுன்சிலிங் தேதி மாற்றம் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 26, 2016

சென்டாக் கவுன்சிலிங் தேதி மாற்றம் !

இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங், பி.பி.டி., படிப்புகளுக்கான இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும் என,
அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 26ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.பார்ம் கவுன்சிலிங்:

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதையடுத்து 28ம் தேதி நடக்க இருந்த பி.பார்ம் கவுன்சிலிங் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மதர்தெரஸா கல்லுாரியில் மொத்தம் 17 பி.பார்ம் இடங்கள் உள்ளன.

காலியிட விபரம்:

புதுச்சேரி: ஓ.பி.சி.,-1, முஸ்லிம்-1, எஸ்.சி.,-6

காரைக்கால்: பொது-1, ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-2 எஸ்.சி.,-1, மாகி:ஓ.பி.சி.,-1, ஏனாம்: எஸ்.சி.,-1,

மேலும் விபரங்களை www.centaconline.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment