பாலிடெக்னிக் மாணவிகளுக்கு மறு தேர்வு எழுத வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 29, 2016

பாலிடெக்னிக் மாணவிகளுக்கு மறு தேர்வு எழுத வாய்ப்பு

லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்த பழைய மாணவிகளுக்கு, மறு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;

தமிழ்நாடு, சென்னை தொழில்நுட்ப கல்லுாரி இயக்குனரகத்தின், தொழில்நுட்ப கல்லுாரியில் படித்த பழைய மாணவிகளுக்கு, மீண்டும் மறுதேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வரும் அக்டோர்பர் 2016 மற்றும் ஏப்ரல் 2017 கல்வியாண்டில் நடைபெற உள்ள தேர்வில், கல்லுாரியின் முழு நேர மாணவிகள் 29000001 முதல் 29999999 வரையும், ஐந்து இலக்க எண் முதல் 28999999 வரை பதிவெண் உள்ள மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பதிவு கட்டணம் ஒரு நபருக்கு 25 ரூபாய், ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.500. ஒரு மதிப்பெண் அட்டைக்கான கட்டணம் 30 ரூபாய். இன்று 28ம் தேதிக்குள் அபராதம் இன்றி பணம் செலுத்ததலாம். அபராத தொகையாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

தேர்வு எழுத விரும்பும் மாணவிகளின் பழைய சான்றிதழ்கள் முதல்வரின் பரிசீலனைக்குட்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வுக்கான கட்டணத்தை தொழில்நுட்ப கல்லுாரி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment