கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? அதிகாரிகள் ஆலோசனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 24, 2017

கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? அதிகாரிகள் ஆலோசனை

கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியைதள்ளிப்போடலாமாஎன அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.கோடை விடுமுறை தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்

அனைத்தும் ஜூன் 1- ந்  தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் தான் உள்ளதுஆனால் தமிழகத்தில் பலஇடங்களில் வெயில் கடுமையாக உள்ளதுகடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைபொய்த்ததுஇதன் காரணமாக ஏரிகள்குளங்களில் தண்ணீர் வற்றினநிலத்தடிநீரும் குறைந்து விட்டதுபல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதுஇதன்காரணமாக பள்ளிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருக்கிறது.மாணவ-மாணவிகள் குடி நீருக்கே அவதிப்பட நேரிடும்அதிகாரிகள்ஆலோசனை கடுமையான வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும்மாணவ-மாணவிகள் சோர்வு அடையும் நிலை ஏற்படும்வெயில் காரணமாகபள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டனஅதேபோல்பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியையும் தள்ளிப்போட வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்எனவே கோடைவிடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்களை திறக்கும் தேதியைதள்ளிப்போடலாமாஎன்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.ஏற்கனவே 2013-ம் ஆண்டு ஒரு வாரம் பள்ளிக்கூடங்கள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment