தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படாது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும். இந்த விடுமுறை செலவாணி முறி சட்டம் 1881-ன்கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல. எனவே, வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட ஊழியர்களுடன் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment